Articles Comments

முதன்மைப் பதிவுகள்

பாம்பரசியல்

-சேனன்- காலச்சுவடு கண்ணனைப் பேசக்கூப்பிட்டு லண்டனில் ஒரு கூட்டம் போடுகிறார்களாம். ஆயிரக்கணக்கான மக்கள் வேட்டையாடப்பட்டபோது – (குஜாராத்தில் மற்றும் இலங்கையில்) சும்மா வேடிக்கை பார்த்திருந்தவர்களுக்கு திடீரென ஏனிந்த கரிசனை? அதனாற்தான் காலச்சுவடு பற்றி  இச்சிறு பதிவைச் செய்யவேண்டியதாயிற்று. * பாம்பு என்ற விலங்குக்கு முதுகெலும்பு கிடையாது. நீண்டதும் குறுக்கு வெட்டாகச் சிறு உருளையான உடலையுமுடைய இந்த விலங்கு தன்னிலும் பலமடங்கு பெரிய விலங்குகளை அப்படியே முழுமையாக விழுங்கக்கூடியது. தனது கடும் விசத்தால் மற்ற விலங்குகளை கணத்திற் கொல்லக்கூடியது. தனது தோலைக் கழற்றிப் புதுவடிவம் எடுக்கக்கூடியது. மனித விலங்கு இன்று மிகப்பெரிய பரிணாமவளர்ச்சி கண்டிருந்தாலும் அவர்களுக்கு முள்ளந்தண்டில் குளிர்ச்சி ஏற்படுத்தும் பயக்கெடுதியை ஏற்படுத்த வல்லது முள்ளந்தண்டே இல்லாத இப்பாம்பு. ஆனால், இந்த மனித விலங்குகளிற் சிலருக்கு பாம்பின் பழக்கவழக்கங்கள் உண்டு. இவர்கள் அரசியலில் எந்தப்பக்கம் நிற்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது வலு கஸ்டம். போதாக்குறைக்கு அவர்கள் தமது அரசியல்-இலக்கிய சட்டைகளையும் அவ்வப்போது மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் தமது ‘இலக்கியப்’ பத்திரிகையால் கக்கும் விசம் எம்மை சிறுகச் சிறுகக் கொல்லத்தக்கது. அப்படி ஒரு பாம்புப்போக்கை வரலாறாகக் கொண்டதுதான் ‘இந்தியாவில்’ இருந்து வரும் காலச்சுவடும் அவர்தம் பதிப்பகமும். பல்லைக்கடித்துக்கொண்டு பதிப்பாளர்கள் பின்னால் திரிய வேண்டிய நிலை பல எழுத்தாளர்களின் தலைவிதியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது எல்லா நாட்டுக்கும் … மிகுதியைப் படிக்க »

பதிவுகள்

போலிப் புரட்சிகளை அடையாளங்காணல்

அனைத்து ஆண்களும் ஏதோ ஒருவித ஒடுக்குமுறை சார்ந்து இயங்கும் வாய்ப்புடையோரே என்ற பயக்கெடுதியில் வாழும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள் பெண்கள். இதில், தமிழ் ஆண்களின் மனங்களிலும் நடவடிக்கைகளிலும் உறைந்துபோயிருக்கும் ஆணாதிக்கம் அதிகம். பெண்களின் மதிப்புப் பற்றி எந்தக் கல்வியும் அவர்களுக்குப்போதிப்பதில்லை.அதனால்தான் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை நாம் பார்க்கிறோம். சில மாதங்களின் முன்னர் தான் அவருக்குத் திருமணமானதாக அறிந்துகொண்டோம். இதோ …மிக விரைவில் குடும்பம் என்ற அமைப்பு பெண்ணுக்கு என்னவெல்லாம் கொடுமை செய்தது என்பதை அப்பெண்ணே வெளிப்படுத்திவிட்டார். மீனாகந்தசாமி தொடர்ச்சியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பவர். தலித், பெண்ணிய சிந்தனைகளைத் தன் எழுத்துகளாக்குபவர். பிற்போக்குத்தனங்களற்ற ஒரு சிறந்த எழுத்தாளரான அவர் இப்போதும் கூடத் தன் திருமண வாழ்க்கை காலத்துக் கய்ப்புகளை காயங்களை ஓர் ஆணென்பவன் தன் துணையான பெண்ணுக்குச் செய்த சித்திரவதைகளை எழுத்தாக்கித்  தன்னொருத்தி அனுபவங்களை முழுச் சமூகத்துக்கான இன்னுமொரு … மிகுதியைப் படிக்க »

மதம் பற்றிய புதுக் கதைகள்- சேனன்-

 Richard Dawkins -ன் The God Delusion – கடவுள் என்ற மாயம் – புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றிக்கதைத்தல். ஊருப்பட்ட அடையாளங்களின் உலகளாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது. இந்த தருணத்தில் மதம் பற்றிப் பேசும்பொழுது எம் பார்வையைக் குறிப்பிட்ட சில அடையாளங்களுக்குள் குறுக்கிக்கொண்டால் கருத்தியல் ரீதியான பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேசமயம் சில தனித்துவமான கலாச்சாரங்களும், அடையாளங்களும் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதன் பண்புகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாது. இதன் காரணமாக நாம் இங்கு எந்த ஒரு மையப்புள்ளியையும் சார்ந்து இயங்காமல் எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முயன்றுள்ளோம். அதனால் மதம் என்று சொல்லி வைக்கும் கருத்தை இந்துத்துவம் இஸ்லாம் என்று வலிந்து கணிப்பதோ அல்லது இந்துத்துவம் இஸ்லாம் பற்றி வைக்கும் கருத்துக்களை மதம் சார்ந்து புரிந்து கொள்வதோ தவறான புரிதலுக்கே இட்டுச் … மிகுதியைப் படிக்க »

அனொனிமா – முகம் மறைத்தவள்

-இளவேனில் அ.பள்ளிப்பட்டி- வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், முக்கியத்துவமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.போர் ஆண்களைக்காட்டிலும் அதிகாரங்களுக்கானது, அதிலிருக்கும் ஆண்களுக்கானது. போரின் எல்லாக் கட்டமைப்புகளிலும் பெண் முழுமையான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறாள். போரின் பெயரைச் சொல்லி இதுகாலம் வரை எத்துணைக் கோடி வன்புணர்வுகள் நடந்தேறியிருக்கும். காலமாற்றத்தில் போருக்கான சூழல்கள், … மிகுதியைப் படிக்க »

பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள் – ட்ரொட்ஸ்கி

பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படைகள்.1(1939)   (மார்க்சியத்துக்காக- என்ற தொகுப்பில் இருந்து2 -முதற்பதிப்பு 1942)   -லியோன் ட்ரொட்ஸ்கி மொழிபெயர்பாளர் : சேனன்   இயங்கியல் என்பது ஒரு புனைவோ அல்லது மர்மமான விசயமோ அல்ல. எமது தினசரி வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குள் குறுங்கிவிடாமல் மிகவும் சிக்கலான இயக்கங்களை சரியானபடி புரிந்துகொள்ளும் முயற்சிக்கான சிந்தனை முறை பற்றிய விஞ்ஞானமே அது. இயங்கியலுக்கும் தர்க்கத்துக்குமான3 வேறுபாடு அடிப்படை கணிதத்துக்கும் உயர் கணிதத்துக்கும் இருக்கும் வித்தியாசம் போன்றது. அதன் பொருளைத் திட்டவட்டமான முறையில் விளக்க இங்கு முயற்சிப்போம். ஒரு ‘A’ இன்னொரு ‘A’ க்கு சமன் என்பதில் இருந்து தொடங்குகிறது இலகு சிலோஜிசமான4 அரிஸ்டோட்டிலிய தர்க்கம். இவ்வகை அடிப்படையான பொதுமைப்படுத்தல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக மனிதரின் பல்வேறு செயல்களை நிர்ணயிக்கிறது. ஆனால் உண்மையில் ‘A’ என்பது இன்னுமொரு ‘யA’ க்குச் … மிகுதியைப் படிக்க »

இந்திய அணுசக்தி துறையின் சாராம்சம் : உங்கள் அழிவில் எங்கள் முன்னேற்றம்

இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் New Socialist Alternative (CWI-India) இன்  நெருங்கிய நண்பருமான பா.அருண் காளி ராசாவால் எழுதப்பட்டது. கூடங்குளம் அணு உலை சம்மந்தமான சர்ச்சையை பற்றிய பல உண்மைகளை வெளிச்சர்த்திர்க்கு கொண்டு வரும் கட்டுரை. கூடன்குள அணு உலை திட்டத்தை செயல் படுத்த துடிக்கும் ஆளும் வர்க்கம் நாட்டின் வளர்ச்சி, அணு உலை பாதுகாப்பு என்று பல பொய்களை மக்கள் நடுவில் பரப்பி வருகிறது. இவர்கள் யாருமே இது வரை அணு உலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி  சிறிதும் கூட பேசுவதில்லை. பன்நாட்டு நிறுவங்களின் லாபத்திற்காகவே அணு உலை திட்டங்களை செயல் படுத்த இந்திய ஆளும் வர்க்கம் முயல்கிறது. இந்த கட்டுரை சுட்டிக் காட்டுவதை போல பொதுஉடைமை சமூகத்தில் மட்டுமே சனநாயக ரீதியில் மனித சமூகம் … மிகுதியைப் படிக்க »

வெல்லத்துடிக்கும் ஒரு போலி

-சித்தார்த்- காதுக்குள் காய்ச்சிய ஈயமாயும் உடலெங்கும் சீழ்பிடித்த ரணங்களாயும் நாம் எம்மீது கொட்டிக்கொண்ட வார்த்தைகள் புழுக்களாய் நெளிகின்றன நாவினால் சுட்ட வடுக்களுடன். போலியான புன்னகையுடன்                                                                                   எமது  புகைப்படங்கள். ஒருவரை ஒருவர் சுட்டெரிக்கும் கண்களும் நீயா? நானா? என்ற திமிருடனும் குழந்தைகளின் வாழ்வைத் தின்று ஏப்பமிடும் எம் வாழ்க்கை. இன்றைய குழந்தைகள் முட்டாள்கள் அல்ல எம்மைப் போல் எம்மையும் குடும்பமாய் ஏற்க. மனிதர்களாய் நட்பு பேணி பிரிதலின் அவசியம் உணர்ந்து பிரிந்து யதார்த்தம் ஏற்று சுயபரிதாபம் தவிர்த்து பிரிவிலும் சுயமாய் வாழலாம் மனிதராய். வா! நட்பாயிருப்போம் குழந்தைகளுக்காக. நம்மில் எவரும் முழுமையற்றவர் என்பதையுணர்ந்து பிரிவிலும் சேர்ந்து வெல்வோம். இல்லையேல்…                                                                                          தோற்றவராவோம். எனக்கதில் சம்மதமில்லை. … மிகுதியைப் படிக்க »

1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும்  கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் சொல்லப்பட்டது.அப்போதெல்லாம் அந்தப் பக்கம் விமானம் குண்டு போட்டுவிட்டுப் போனால் இந்தப் பக்கத்து ஒழுங்கையால் ஓடிப் போய் என்ன நடந்தது என்று பார்க்குமளவு யுத்தமும் சத்தமும் எனக்குப் பழகிப் போயிருந்தன. மேலே எது வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் அது பற்றிக் கவலையின்றிக் கீழே றோட்டில் சைக்கிளில் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது.வேறு வழியில்லை வருவது வரட்டும் என்ற துணிச்சலில்லை.என் போன்ற சனங்களுக்கு அதை எதிர் கொண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்கவில்லை. சில … மிகுதியைப் படிக்க »

மண்ணாகி…

நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது?                                                                         எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. -தர்மினி- … மிகுதியைப் படிக்க »

காற்றும் மழையும்

-சித்தார்த்- காற்று தனியே நடந்து கொண்டிருந்தது இணைந்து கொண்டது ஒரு பெரு மழை இடியும் மின்னலும் வெடித்து மின்ன நின்றுபோகிறது மழை அமைதியற்றுப் போனது காற்றின் உலகு காற்றும் மழையும் கூடின இருந்தும் மழைக்குச் சலனம் துமித்துவிட்டுப் போகிறது இடிக்கும் மின்னலுக்குமாய் வானத்தைப் பார்த்திருக்கிறது மழை அவை ஓய்ந்ததும் பெய்ய காற்று வீசிக்கொண்‌டேயிருக்கிறது பிரசவ வலியில் கார்மேகம் இடி இடிக்கலாம் மின்னல் வெட்டலாம் இடியும் மின்னலும் ஓய்ந்து போகலாம் வேலியற்ற காற்று எப்போதும்  வீசும் அது மழை மீண்டும் வரலாம் என காத்திருக்கிறது காற்று வீசிக்கொண்டேயிருக்கப்போகிறது மழை பெய்து தான் ஆகவேண்டும் நான் காற்று மழை நீ  ! … மிகுதியைப் படிக்க »