-
சுதந்திரம் என்பது யாருக்கானது – சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்
February 4, 2019417 . Views .இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது? இது உண்மையில் மக்களுக்கான சுதந்திர தினமா என்ற கேள்வியுடன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தூதரகத்துக்கு முன் போராட்டம் ஒன்றை நடத்தியது . பல்வேறு அமைப்புகளும், நூற்றுக்கணக்கான மக்களும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றது. ஆனால் இன்னும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப்
Read more -
பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.
February 1, 2019273 . Views .கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு கொலை மிரட்டல் செய்தது தொடர்பான வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் அழுத்தம் காரணமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த
Read more -
மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்…
January 31, 2019139 . Views .இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் தோட்ட தொழிலாளர்கள் 28-1-19 அன்று கூட்டு ஒப்பந்த மூலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2016 ஆண்டில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு Rs. 500ரூபா. இவ்வாண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அடிப்படை சம்பளம் Rs700 ரூபா என கைசாத்திடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அவர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக
Read more -
காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.
January 22, 2019179 . Views .இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி அலையும் ஒருசமூகமாகவும் இவர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இச்சமூகத்தின் வலிகள் மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.அவ்வாறு நீங்கா வலியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை. இந்நிலையில் இவர்கள் மத்தியில் மீண்டும் சோகத்தினை உண்டாக்கியிருப்பது மன்னார் மண்ணில்கண்டுபிடிக்கப்பட்ட
Read more -
இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்
January 7, 2019142 . Views .பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய
Read more -
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி
December 31, 201897 . Views .கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின. நெட்பிளிக்சில் (Netflix) வெளியான அரசியல் வலைத்தொடர் (Webseries) நாடகங்களில் ஒன்றான ஹவுஸ் ஒப் கார்ட்ஸ் (House Of Cards) இனை விட இலங்கை அரசியல் களம், சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. கட்சித் தாவல்கள், பேரம் பேசல்கள், அமைச்சுப்பதவி, நம்பிக்கையில்லாப்
Read more -
இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.
November 24, 2018138 . Views .நுஜிதன் இராசேந்திரம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும்
Read more -
துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.
November 17, 2018199 . Views .மதன் பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர். அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு தற்பொழுதுள்ள ஆளும் கட்சி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அகதிகள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வாழும் மக்களும் தங்களது சில அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையே உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் இந் நாட்டின் வலதுசாரி அரசியல்வாதிகள்.அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்கள் பற்றியோ, நாட்டின் எதிர்கால நலன்
Read more -
வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018
November 11, 2018144 . Views .வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018 -மதன்- பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கானஉரிமைகளுக்காக போராடும் அமைப்பான சோசலிஸ் பார்டி இதை ஒழுங்கு செய்தது. இதிலே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடை பெற்றன..அதில் வேலைவாய்ப்பு. வீடு கல்வி சுகாதாரம் அகதிகளின் உரிமை குறைந்த பட்டச ஊதியம் மக்களுக்கான சேவைகள் உரிமகளுக்கான போராட்டங்கள். சர்வதேச போராட்ட
Read more -
கனம் சம்பந்தன் ஐயா
November 1, 2018321 . Views .சம்பந்தன் ஐயாவுக்கு 2015இல் எழுதிய மடல் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கிறோம். சம்பந்தன் ஐயா அவர்களுக்கு… நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்”; ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள்.
Read more -
அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்…
October 11, 2018413 . Views .மதன் இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யக்கூறி தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் லண்டன இடதுசாரி போராட்ட அமைப்புகளுடன் இணைந்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் 10-10-18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் இருள் சிறைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து அண்ணளவாக பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இவர்களின் விடுதலைக்கான எந்த முயற்சிகளும் இலங்கை அரசினால் எடுக்கப்படவில்லை. மைத்திரி – ரணில்
Read more -
பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள
October 10, 2018240 . Views .சு. கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல்,
Read more -
காவல்துறை அதிகாரியின் ஸ்காட்லாந்து பயணம் ரத்து
October 1, 2018359 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த சனிக்கிழமை (செப்டெம்பர் 29) பிரித்தானியாயவிற்கு வருகை தரவிருந்த, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியான புஜித் ஜெயசுந்தரவின் பயணமானது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள, ஸ்காட்டிஷ் போலீஸ் கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்து பிரத்தியோக பயிற்சி எடுக்கவிருந்த நிலையிலேயே இப் பயணமானது ரத்து செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீஸ் கல்லூரியானது 2௦13 முதல் கல்லூரியாக மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து காவல்துறையின் தலைமையகமாகவும் விளங்குகின்றது. உளவுத்துறை பகுப்பாய்வு, துப்பறிதல், தொழில்நுட்பங்களைக்
Read more -
இம்ரான் கானின் வெற்றியின் பின்னணியில் இராணுவம்!!
August 31, 2018257 . Views .சு.கஜமுகன் (லண்டன்) gajan2050@yahoo.com கடந்த மாதம் பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பி.ரி.ஐ ( தெஹ்ரீக் – இ- இன்சாப்) கட்சி வெற்றி பெற்றுள்ளது அல்லது வெல்ல வைக்கப்பட்டுள்ளது எனலாம். பாகிஸ்தானின் இருபத்திரண்டாவது பிரதமராக ஆட்சி அமைத்திருக்கும் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது 1996 ஆம் ஆண்டு உருவாகப்பட்டு, 22 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் தேசிய சபையானது 342 ஆசனங்களைக் கொண்டது
Read more -
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?
July 31, 2018424 . Views . தேர்தல் முடிவுகள் கடந்த 27 ம் திகதி நடந்து முடிந்த பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி பி.ரி.ஐ வெற்றி அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன. 342 ஆசனங்கள்
Read more -
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்
July 6, 2018390 . Views .நுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையே உள்ளது. இவ்விதமாகத் தமக்கென தனியார் காணிகளை அபகரிப்பதும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துக்கு உலைவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து நிரக்கதிக்கு உள்ளாக்குவதும் இலங்கை அரசின் நடைமுடையாக இருந்து வருகிறது. அரசின் நல்லிணக்கம்
Read more -
ஈழத்துக்கு எதிரான இலங்கை மாவோயிச பார்வை
June 29, 2018319 . Views .வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை – என்ற சி க செந்தில்வேல் அவர்களின் நூலினை முன் வைத்து… 1 தேசியம் பற்றிய சரியான நிலைபாடு எடுக்காது, போல்சுவிக்குகள் இரஷ்யப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சி நோக்கி நகர்த்தியிருக்க முடியாது. தேசியம் பற்றிய தெளிவான பார்வை புரட்சியை முன்னடத்த மட்டுமல்ல, புரட்சிகர கட்சியை கட்டுவதற்கும் அவசியம். இரஷ்யப் பெரும் தேசிய இறுகிய பிடிக்குள்ளும், பல் தேசிய அடையாளங்களை புரட்சிகர மாற்றுக்காக வென்றெடுக்கும் வேலையை செய்தனர்
Read more -
பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியமும் -தெற்காசியாவும்
June 28, 2018989 . Views . உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்றாம் கட்ட வீழ்ச்சியின் சாத்தியம் நவ காலனித்துவ நாடுகளைச் சுற்றி இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குறிப்பாக்க சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளிலும் பாரிய மாற்றை கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வரும் புதிய நெருக்கடி இந்த நாடுகளுக்குள்ளேயே குறுகி நின்று அழிந்து விடும் என எதிர்பார்ப்பதும் தவறு. உலகப் பொருளாதாரத்தின் 58% பகுதி
Read more -
உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை!
June 26, 2018335 . Views .உச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை! – தினசரி விலை நிர்ணய கொள்கையை உடனடியாக திரும்ப பெறு. – மத்திய, மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் மீதான மறைமுக வரிகளை ரத்து செய். – எண்ணெய் நிறுவனங்களை உழைப்பாளர்கள் கட்டுபாட்டில் பொதுவுடமையாக்கு. 2017 ஜுன் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை
Read more -
வளங்களை வேட்டையாடும் வேதாந்தா
June 23, 2018269 . Views .சு. கஐமுகன் gajan2050@yahoo.com அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தில் பதின்மூன்று பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்ததும் இருந்தனர். வேதாந்தா போன்ற காப்ரேட் நிறுவனங்களின் நலனுக்காக தனது சொந்த மக்களையே குருவிகளை சுடுவது போல் சுட்டு கொன்றது மோடி/தமிழ்நாடு அரசு. காப்ரேட்டின் நலனுக்காக எந்த எல்லை வரைக்கும் இவ்வரசு செல்லும் என்பதையே மேற்படி தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
Read more