இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

1,156 . Views .

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் மற்றும் பல்லின மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  கல்வியும் சுகாதாரமும் விற்பனைக்கு இல்லை , மாணவர்களை ஒடுக்கதே , அரசியல் கைதிகளை விடுதலை செய் , மாணவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களிலும்  மூன்று மொழிகளிலும்  ஏந்தி இருந்தார்கள்.

தமது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டகாரர்கள் மகஜர் ஒன்றை கையளிக்க முற்பட்ட போது இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலர்கள்  அதற்கு அனுமதிக்கவில்லை. இறுதியில் போராட்டகாரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய  மகஜரை அலுவலக வாயிலில் ஓட்டி சென்றனர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் , சிங்கள  மற்றும் முஸ்லீம் மக்கழும் கலந்து கொண்ட இலங்கை அரசுக்கு ஏதிரான போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

[robo-gallery id=”2149″]