திருகும் ரணில் திமிரும் போராட்டக்காரர்கள்

308 . Views .

கீழ்வரும் கட்டுரை வெள்ளிக்கிழமை (22/07/2022 அதிகாலை நிகழ்வுகளுக்கு முன் எழுதப்பட்டு www.socialistworld.net இல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியை  ஏற்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளதால், இலங்கையில் நெருக்கடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரணில் விக்கிரமசிங்கே (ரணில்) 2022 ஜூலை 20 அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுதியான வெகுஜன இயக்கம் ராஜபக்ச குடும்பத்தை அதிகாரத்திலிருந்து தள்ளியது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினார். சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய அனுப்பிய இழிவான ‘இராஜினாமா’ மின்னஞ்சலை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அதிகாரத்தின் மீதான பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.

ஆரம்பத்தில், கோட்டாபயவின் இராஜினாமா மற்றும் புதிய நியமனங்கள் தொடர்பாக மொத்த குழப்பம் நிலவியது. உண்மையில், ராஜினாமா செய்தியைப் பெறுவதற்கு முன்பே அரசாங்கம் அதை பரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் கோபமான மக்கள் எதிர்ப்பு அவர்கள் ஆக்கிரமித்திருந்த ஜனாதிபதி இல்லத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டது. உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாமலேயே, ரணில் தற்காலிக ஜனாதிபதியாக தனது கடமையை ஆரம்பித்தார். சில மணிநேரங்களுக்குள், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக “பாசிஸ்டுகள்” என்று அவர் தீய பிரச்சாரத்தையும் செய்தார். போராட்டக்காரர்களிடமிருந்து பாராளுமன்றத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து வழிகளையும் செய்ய ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில், புதிய நிறவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்கள்  தேர்ந்தெடுக்கும் கோலி கூத்தும் தொடங்கியது.

கோத்தபய பெரும்பான்மையான மக்களால்  நிராகரிக்கப்பட்ட போதிலும், அவர் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்வதற்கு முன்பே அவர் இலங்கையை விட்டு இரகசியமாக வெளியேரினார். பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள அவரது எம்.பி.க்கள் புதிய ஜனாதிபதியை (இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பரந்த நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி) ‘தேர்வு’ செய்தனர். நிராகரிக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தில் தொடரும் முயற்சிக்கு ஒரு ‘ஜனநாயக’ சாயத்தை பூசுவதே  இந்த   போலியான ‘தேர்தல்’ ஆகும். மகிந்த ராஜபக்ச விலகியதையடுத்து ரனில் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்தே அவரை இராஜினாமா செய்யுமாறு கோரி வரும் வெகுஜன இயக்கத்தின் மீதான நேரடி தாக்குதல் இந்த ஜனாதிபதி தெரிவுவாகும் . இந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதமும் தற்போதைய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் கொண்டுள்ள அப்பட்டமான அவமதிப்பையே வெளிப்படுத்துகின்றது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த பாராளுமன்ற சூழ்ச்சியை முன்னெடுக்க, அவர்கள் தங்கள் வசம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தினர். நாடு கண்டிராத மிகக் கொடூரமான ‘அவசரநிலை’ ஆணை ஒன்றைச் செயல்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தனர். பாராளுமன்றம் மற்றும் பிற அரச நிறுவனங்களைப் பாதுகாக்க ஆயுதப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள், இரகசிய உடன்படிக்கைகள் மற்றும் சூழ்ச்சிகள் நடந்தன. இதன் விளைவாக மூன்று வேட்பாளர்கள் தங்களை ஜனாதிபதியாக முன்னிறுத்தினார்கள்.

பெரும்பான்மை ஆதரவு இல்லாத வேட்பாளர்கள்

எனினும் இந்த வேட்பாளர்கள் எவருக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை. ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளியும் அறியப்பட்ட கடும்போக்கு சிங்கள தேசியவாதியுமான டலஸ் அழகப்பெரும தனது சொந்த நாடாளுமன்றக் கட்சியின் ஆதரவைப் பெற முடியாது. சமகி ஜன பலவேகய (SJB – பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சஜித்தால் உருவாக்கப்பட்ட புதிய கட்சி) சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளித்தார். டல்லஸ் மற்றும் சஜித் ஆகியோர் ஆளும் கட்சியையும் (145 ஆசனங்களைக் கொண்டிருந்தது) மற்றும் பிரதான எதிர்க்கட்சியையும் (54 ஆசனங்களைக் கொண்டிருந்தது) பிரதிநிதித்துவப்படுத்தியதால் அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக பலரால் பார்க்கப்பட்டது. ஆனால் டல்லாஸ் 82 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. இடதுசாரி ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் 3 ஆசனங்களைப் பெற்று அந்த மூன்று வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்தார். இதுவரை ஆதரவில்லாத ரணிலுக்கு 134 எம்பிக்கள் வாக்களித்தனர். ஒரு காலத்தில் ரணில் தலைமையிலான பலம் வாய்ந்த யூஎன்பி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அவமானகரமான வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்தது, வெறும் 2.15% வாக்குகளைப் பெற்றது, 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 105 ஆசனங்களை இழந்தது, பாரிய அழிவை சந்தித்தது. அந்தத் தேர்தலில் ரணில் மிக மோசமான வாக்குகளைப் பெற்றார். ஒரு ஆசனத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், கட்சிகளின் தேசிய வாக்குகளின்படி விகிதாசார முறையில் ஒதுக்கப்பட்ட 29 ஆசனங்களில் ஒன்றைப் பெற்று ரணில் பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டர். இதற்கு முன் ஆறு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் பிரதமராக முழு காலமும் பணியாற்றவில்லை.இதற்கு முன் ஆறு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் பிரதமராக முழு காலமும் பணியாற்றவில்லை.

கோத்தபயவின் வெளிநாட்டுப் பயணமும் யூ.என்.பி.யின் முந்தைய வீழ்ச்சியும் ரணிலோ அல்லது ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் (SLPP) எஞ்சிய ஆதரவாளர்களுக்கோ தற்போது மக்கள் ஆதரவு இல்லை என்பதைக் காட்டுகிறது; உண்மையில் அவர்கள் பெரும்பான்மையினரால் வெறுக்கப்படுகிறார்கள்.

எனினும் ரணில் அதனை ‘அனைத்து விடயங்களும் வழமை போல் நடைபெறுகின்றன ’ என்று காட்ட முயற்சிக்கிறார். புதிய அதிபராக பதவியேற்ற அவரது முதல் செயல், பாதுகாப்புப் படையினரைப் பாதுகாத்ததற்காக நன்றி தெரிவிப்பதாகும். வெகுஜன இயக்கம் முன்வைத்த எந்த ஒரு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகுஜனங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கத்திற்கு அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் தேவைப்படுவதால், மக்களால் கோரப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தற்போதைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. 70% மக்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க விரும்புவதாக ” Verité Research” நடத்திய ஆய்வில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்ப்பு இயக்கம் எவ்வாறு தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது மற்றும் அதன் கோரிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்ற அடிப்படையிலும் முக்கியமான கேள்விகளை எதிர்கொள்கிறது. போராட்டக்காரர்களின் கவனம் தற்போது ரணிலை ஒழிப்பதை நோக்கியே திரும்பியுள்ளது (‘ரணில் வீட்டுக்கு போ’ கோஷத்துடன்). அறகலயா (போராட்டம்) இயக்கம் முன்வைக்கும் கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து விவாதம் மற்றும் திட்டமிடல் குறைவு. மிக முக்கியமாக, ரணிலை மக்கள் அகற்ற முடிந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற முக்கிய விவாதம் இப்போது தொடங்க வேண்டும்.

பழைய பாராளுமன்றத்தை ‘புதியதாக’ முன்வைக்க ரணில் முயற்சிப்பார். ‘தேசிய’ அரசை உருவாக்கி இடைக்கால அரசாக முன்வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ரணிலின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தை நடத்த முன்வர வேண்டும்.தமிழ் சொலிடாரிட்டி அரசாங்கத்தின் போலி பாசாங்குகளை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றது. மாறாக, ஜனநாயக வெகுஜன தொழிலாளர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் வெகுஜனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஆளும் வர்க்கத்தின் போட்டியிடும் பிரிவுகளுக்கு அல்லாமல் உழைக்கும் மக்களுக்காகவும் ஆளும் வர்க்கத்தின் போட்டியிடும் பிரிவுகளுக்கு அல்லாமல் உழைக்கும் மக்களுக்காகவும் ஒரு அரசாங்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கவும் கட்டமைக்கப்பட வேண்டும்