ரணிலால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?

ஐக்கிய சோசலிசகட்சி தோழர் தம்மிகா சில்வா அவர்களின் முகநூல் பதிவின் 6/12/22) தமிழாக்கம் 

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை இரண்டு மாதங்களில் நிறைவு செய்யும். இதுவரை எந்த ஆட்சியாளராலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. இன பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இனப்படுகொலைப் போரைத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி 30 வருட கால யுத்தத்தின் போது நாடு அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. இதுவரை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் இன நெருக்கடியைத் தீர்ப்போம் என்ற வாக்குறுதியுடன்தான் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு இனவாத தலைவர்களாக மாறினர்.

வடக்குக்கு சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதியின்படி ரணிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்னுமொரு சுற்றில் தமிழ் மக்களை ஏமாற்றும் தந்திரம் அது. ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக முதல் தடவையாக பதவியேற்றாலும் மொட்டு  கட்சியில் இருந்து ஜனாதிபதியானார்.மொட்டு கட்சிகாரர் (ஸ்ரீ லங்கா பொதுஜன் பொரமுன) இந்த நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் செல்லமாட்டார். அவர் பிரதமராக பல தடவைகள் வடக்கிற்குச் சென்று இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் செய்ய முடியாததை இன்று மற்றவர்களின் அரசாங்கத்தின் கீழ் செய்ய முடியாது என்பதை சுமந்திரன் புரிந்து கொள்ளாவிட்டாலும் வடக்கு மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். இதனைப் புரிந்து கொண்ட வடக்கு மக்கள் ரணிலின் அடக்குமுறையையும் மீறி பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி மாவீரர் நாளை  மிகவும் வெற்றிகரமாக நடத்தினர்.

பாராளுமன்றத்தில் ஜோக்கராக மாறியுள்ள ரணில், அதிகாரப் பகிர்வை விரும்புகிறீர்களா என எம்.பி.க்களிடம் கேட்டதற்கு எவரும் பதிலளிக்கவில்லை. ஆனால் அங்குள்ள இனவாதிகள் ரணிலுக்கு அதிகாரத்தை பிரிக்க இடமளிக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் இந்த நாட்டின் அதிகாரத்தை ரணில் பிரிக்க ராஜபக்சக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இடதுசாரி பார்வையால்  மட்டுமே அதிகாரத்தைப் பிரித்து நாட்டை ஒன்றிணைக்க முடியும். ரணில் எவ்வளவு தாராளவாதியாக இருந்தாலும் இந்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களின்  கீழ் அதிகாரத்தை பிரிக்க முடியாது. ஏனெனில் தனது கட்சியில்  ஒருவரை வைத்துக்கொண்டு இந்த நாட்டில் அதிகாரத்தை பிரிக்க முடியாது என்பது ரணில் சுமந்திரன் இருவருக்கும் தெரியும். இன்னுமொரு சுற்றில் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் உத்தியை ரணில் கண்டுபிடித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன 13வது அரசியலமைப்பை கொண்டு வந்த போது அந்த அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சராக இருந்தார். இந்த நாட்டின் இனவாதிகள் தமது அரசாங்கம் கொண்டு வந்த 13ஐ இன்று வரை நடைமுறைப்படுத்த இடமளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் 13ஐ அமல்படுத்துவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்தனர். அதையும் தாண்டி நான் 13+ தருகிறேன் என்று மகிந்த இந்தியாவிடம் கூறினார். இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய தலைவராக மகிந்த வருவதையே விரும்பினார். ரணிலின் கூற்றை நிறைவேற்ற வேண்டுமானால் மகிந்தவின் தொகுதி எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சிங்கள பௌத்த இராச்சியத்தின் அதிகாரத்தை பிளவுபடுத்த கை ஓங்கும் துரோகிகள் ரணிலுக்கு இல்லை. இன்று பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு அதிகாரம் இல்லை. ரணிலின் கூற்று அது ஒரு பரிகாரம் மட்டுமே. அப்படியானால், ரணிலின் கூற்று தமிழ் மக்களை உண்மையான வார்த்தையின் அர்த்தத்தில் ஏமாற்றும் செயலாகும்.

இந்த நாட்டின் முற்போக்கு மக்கள் முதலாளித்துவத் தலைவர்களின் விசித்திரக் கதைகளால் வஞ்சிக்கப்படும் காலத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளனர் என்பதை இந்தப் போராட்டம் (அரகலய ) நிரூபித்தது. வடக்கு – கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும். அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சுயநிர்வாகம் மூலம் மட்டுமே அதை அடைய முடியும். வடக்கு மற்றும் தெற்கின் ஒன்றுபட்ட இடதுசாரிப் படை மூலம் வெற்றிபெற முடியும். அப்படி இல்லாமல் ரணில், மகிந்த போன்ற முதலாளித்துவ தலைவர்கள் மூலம் இதை எதிர்பார்க்க முடியாது. இந்தப் போரில் வெற்றிபெற அனைவரும் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.