பிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

இன்று (22.10.2017) பிரித்தானியாவில் தமிழர்கள் ஓர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கப்பட வேண்டும். இராணுவம் அபகரித்து தம் வசம் வைத்துள்ள மக்களின் காணி நிலங்களை மீள கையளிக்க வேண்டும். வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இந்த முன்று கோரிக்கைகளை முன் வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையில் நடைபெற்றுகொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் வலு சேர்க்கும் வகையில் அமைந்து இருந்தது. இதில் பெருமளவான இளையோர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடையமாகும்.

போராட்டத்தின் முடிவில் இந்த முன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

[robo-gallery id=”2415″]