பட்டினியோடுதான் படுக்கைக்கு போகப்போகிறோமா?

1,555 . Views .

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதியார். இதன் பொருள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதுதான்  ஆனால் உலகின் பணக்கார நாடு என்னும் மாயையில் இருக்கும்   பிரிட்டனில், 2022 ஆம் ஆண்டில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க உணவு வங்கிகள் மற்றும் ‘Olio‘ போன்ற உணவுப் பகிர்வு  ஆஃப்களை நம்பியுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாத்திரமில்லை  2008 ஆம் ஆண்டிலிருந்து மிக வேகமாக உணவு பொருட்களின் விலை உயர்வடைந்த்து கொண்டே வருகின்றது.

காலநிலை மாற்றப் போர் மற்றும் வர்த்தக மோதல்கள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் முதலாளித்துவ உணவு முறை ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. உணவின் விலை ஆண்டுக்கு 12.1% உயர்ந்து, இந்த இலையுதிர்காலத்தில் மில்லியன் கணக்கானவர்களை பானுக்கான போலினில் நிற்க வைத்திருக்கின்றது. லண்டனில் இலங்கை இந்திய  தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் ஈஸ்ட் ஹாம் பகுதியில் என்றும் இல்லாதவாறு இலவச உணவு பொதிகளை பெறுவதற்கான மிக நீண்ட வரிசை தொடர்கிறது. 

‘புதிய இயல்பு’

இன்று அனைத்து சுப்பர் மார்க்கட்டுகளில் விலையேறுவது ஆடம்பரங்கள் பொருட்கள்  அல்ல,  நாம் அனைவரும் நாளாந்த உணவு தேவைக்காக வாங்கும் அடிப்படை பொருட்களான  எண்ணெய், வெண்ணெய், பான் , பால் மற்றும் பாஸ்தா. சில விலைகள் 50% வரை உயரும். எரிசக்தி விலை உயர்வு உணவு மற்றும் பான பணவீக்கத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு செலவுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், 40% உணவு மற்றும் பானங்கள் இறக்குமதி செய்யப்படும் பிரிட்டனில், பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி விலையை மேலும்  உயர்த்துகிறது.

இதற்கிடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மைக்ரோவேவில் உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன,சுப்பர் மார்க்கட்டுகளில் ரெடிமெட்டு உணவுகள் குளிரூட்டியில் அடுக்கடுக்காக அடுக்கப்படுகின்றன  ஏனெனில் அடுப்பைப் பயன்படுத்துவது கட்டுப்படியாகாது, புதிய சத்து மிக்க உணவை வீட்டில் சமைத்து சாப்பிடுவது என்பது கனவாகப்போகிறது. இது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதாரண விவகாரம் போல!

உலக உணவுத் துறையின் மதிப்பு $8 டிரில்லியன் டாலர்கள் ஆகும், உலகின் முதல் ஐந்து முதலாளிகளில் இரண்டு பேர் வால்மார்ட் மற்றும் மெக்டொனால்ட்ஸ், மேலும் உலகின் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் விவசாயத்தில் வேலை செய்கின்றனர். ஆனால் விவசாயிகள் முதல் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை, விருந்தோம்பல் மற்றும் சில்லறை வணிகத் தொழிலாளர்கள் வரை, நாம் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பலரின் உழைப்பு, அதைத் தாங்களே உயிர்வாழ போதுமான ஊதியத்தை  பெறவில்லை. பிரித்தானியாவில்  சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கட்டுக்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மூவரின் வேலையை ஒருவராக செய்யும் படி வதைக்கப்படுகின்றார்கள். 

இடது சாரிகள்  ஊதிய உயர்வுக்கான வேலைநிறுத்தங்களை ஆதரிக்கின்றனர் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு £15 ஆக உடனடியாக உயர்த்த வேண்டும், அத்துடன் மக்கள் தொடர்ந்து பட்டினி கிடக்காமல் இருக்க சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

தேசத்தின் நன்மதிப்பு என்பது மக்களின் நல் ஆரோக்கியத்தில் இருக்கின்றது, அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பள்ளி உணவு கிடைக்கச் செய்வதற்கும், உணவு வங்கிகளுக்கு நிதியளிக்கவும் கவுன்சில்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

உணவுக்கான உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைக் கொடுக்க முடியாமல் நாங்கள் போராடும் அதே வேளையில் எரிசக்தி மற்றும் உணவு நிறுவனங்கள்  தமது லாபத்தை அதிகரித்து கொண்டே இருக்கின்றது.ஆனால் நாம் வாழும் முதலாளித்துவ அமைப்பு கூலிகளைப் பிழிந்து அடிப்படை தேவைகளுக்கான விலையை மீண்டும் உயர்த்த தயாராகுகின்றன. நாங்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எரிசக்தி மற்றும் உணவு நிறுவனங்களை தேசியமயப்படுத்த தயாராகுவோம்.