இலங்கையின் மக்கள் தலைநகரை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வெளியேற்றினர்

194 . Views .

இலங்கையின் வரலாற்றில்  ஜூலை 9 ஆம் தேதி ஒரு வரலாற்று நாள் , அன்று இலங்கையின் பொது மக்கள் மிகவும்  தீர்க்கமாக வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தனர். நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தங்கள் குரல்களை உரத்த குரலில் பதிவு செய்ய தலைநகர் கொழும்பில் மக்கள் வந்து இறங்கினார்கள் . மக்கள் வந்தார்கள், வந்தார்கள், அவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

பிரபல்யமற்று  போன  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  அகற்றுவதற்கான நாளாக ஜூலை 9 ஆம் தேதி போராட்டகாரர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்த வெகுஜன இயக்கம் மே 9 அன்று மிகவும் பலம் வாய்ந்த  போராட்டத்தை ஒழுங்கமைத்து இருந்தது. அந்த போராட்டத்தின் காரணமாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் பதவியிலிருந்து வெளியேறும் முன் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தார். எதிர்ப்புரட்சியின் இந்த கும்பல் அராஜராகம்  போராட்டக்காரர்களின்  கோபத்தின் முதல் வெடிப்பைத் தூண்டியது – நாடாளுமன்ற உறுப்பினர்களின் 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.இலங்கை அரச கட்டமைப்பு இதற்கு எதிர்வினையாற்றியதுடன்  மஹிந்தவின் அரண்மனையை நிரப்ப முன்னாள் பிரதமரும்  வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது.

இந்த தெரிவினால் மக்கள்  இயக்கத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், ‘கோட்டா கோ கம’ ஆக்கிரமிப்பு தனது எதிர்ப்பைத் தொடர்ந்தது. இந்த போராட்டத்தின் வீரியம் , குறைந்த மட்டத்தில் இருந்தபோதிலும், ஜூன் 9 அன்று மற்றொரு ராஜபக்சேவை வெளியேற்றியது, ராஜினாமா செய்யப்பட்ட  பசில் ராஜபக்ச, அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டடவர்.

ஆனால் ராஜபக்ச குடும்பம் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து சொல்லிக்கொண்டு , முக்கியமான நிறைவேற்று ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்க மறுக்கிறது. நாடு முழுவதும் உருவாகியுள்ள மகத்தான கோபத்தையும் வெறுப்பையும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முற்றாக குறைத்து மதிப்பிட்டுள்ளனர். பல தடைகள் இருந்தபோதிலும், கோட்டாபய மற்றும் ஒட்டுமொத்த ராஜபக்ஷ குடும்பத்தின் முடிவாக ஜூலை 9 ஆக இருக்க வேண்டும் என்ற ஒருமித்த உணர்வு இருந்தது.

ராஜபக்ச குடும்பம் தனது ஆட்சியை தொடர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமளிகை  (பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம்) உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மாநில உளவுத் துறையினர், காவல்துறையுடன் இணைந்து முக்கிய செயற்பாட்டாளர்களை கைது செய்யத் தொடங்கினர். பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு சார்பு ஊடகங்களிலும் அரச ஆதரவுடன் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் இயக்கத்திற்கு பயந்து கோட்டாவின் பின்னால் வரிசையில் நின்றனர்.கோட்டா மீண்டும் பாராளுமன்றத்தை  கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது போல் தோன்றியது.  9 ஜூலை வந்தது, கோட்டா  மக்கள் அழுத்தத்தைத் எதிர் கொள்ள முடிவு செய்தார். கடைசி நிலையாக, மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு, போராட்ட நாளுக்கு முந்தைய நாள் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 9 அன்று நடந்த போராட்டத்தை ஆதரித்தவர்கள் காட்டிய பரவலான கண்டனத்தையும் உறுதியையும் தொடர்ந்து, ஊரடங்கு சட்டம் காலையில் நீக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்கு செல்வதற்கு போதுமான சேவைகளை நடத்துவதற்கு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தமும் கைவிடப்பட்டது. பயணம் செய்ய முடியாதவர்களுக்கு, மற்றவர்கள் பணம் செலுத்தினர். சிறு வணிகங்களும் சில இடங்களில் டிக்கெட்டுகளை ஸ்பான்சர் செய்தன. இறுதியில், ரயில் மற்றும் பேருந்து சுமைகளில் மக்கள் தலைநகரில் இறங்கினர். எல்லோர் மனதிலும் ஒரே ஒரு விஷயம் மாத்திரமே இருந்தது  – கோதாவை ஒழித்துக்கட்டுங்கள்.

இதை மனதில் கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றதுடன், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பல தடைகளை எதிர்கொண்டனர். ஒன்றல்ல பல அடுக்குகள். வெகுஜனங்கள் அவற்றை உந்தி  தள்ளினார்கள். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டது. ஜனாதிபதியின் வீட்டிற்கு வெளியே இரண்டு எதிர்ப்பாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் வன்முறை மற்றும் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டனர். ஆனால் இது கூட அவர்களைத் தடுக்க போதுமானதாக இல்லை.

 

அந்த நேரத்தில், ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் பாரிய படுகொலைகளைச் செய்யத் தயாராக இல்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. மே 9 அன்று நடந்ததைக் கருத்தில் கொண்டு, மக்கள் இயக்கத்தை எடுத்துக் கொள்ள முடிவு செய்தால், அதன் விளைவுகள் குறித்து அனைவரும் அஞ்சினர்.

இறுதியாக வெகுஜனங்கள் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்குள் தள்ளப்பட்டபோது, ​​அது காலியாக இருந்தது. கோட்டாபய முன்கூட்டியே இரகசியமாக தப்பிச் சென்றிருந்தார், நாம் எழுதும்  போல், அவர் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் தற்போது இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ஆதரவாளர்கள் சிலர் கப்பலை நோக்கி ஓடுவதைக் காட்டும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன. விமான நிலையத்தில் இருந்த குடிவரவு அதிகாரிகள் பலர் ராஜபக்ச குடும்பத்தினர் விமான நிலையத்தினூடாக வெளியேறும் முயற்சியை தடுப்பதாக அறிவித்துள்ளனர். இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள உள்ளூர் தொடர்புகள் மூலம், ராஜபக்ச குடும்பத்தினர் சில ரகசிய மீட்புகளைக் கண்டுபிடித்தனர்.

போராட்டக்காரர்கள் கோரிய உடனடி பதவி விலகலை ஜனாதிபதி புறக்கணித்தார்கள்.  போராட்டடக்காரர்களை  “தீவிரவாதிகள்” என்று நிராகரித்தார். அவரும் பிரதமரும் “ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்போம்” என்று கூறினார். இறுதியில், கோட்டா ராஜினாமாவை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது – ஆனால் அதற்குப் பிறகும் அவர் ராஜினாமாவை ஜூலை 13 வரை தாமதப்படுத்தினார். மறுபுறம், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை பதவி விலகப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுடனும் மோதினார். சிறிது நேரத்தில், அவரது தனிப்பட்ட குடியிருப்பு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. முக்கிய போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பலர் அலரிமளிகை மற்றும் பிற குடியிருப்புகளை முற்றுகையிட்ட போதிலும், இந்த சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கொள்ளை நடந்ததாக புகார் இல்லை. ஜனாதிபதியின் இல்லத்தினுள் சுமார் 18 மில்லியன் ரூபா பணத்தையும் எதிர்ப்பாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கொள்ளை குற்றச்சாட்டு வராமல் இருக்க அந்த பணம் எண்ணப்பட்டு அரசிடம் கையளிக்கப்பட்டது.

கோட்டாபயவின் போலியான ராஜினாமாவை எதிர்ப்பவர்கள் இப்போது ஜனாதிபதி மாளிகையில்  தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்துள்ளனர். ஜனாதிபதி பதவி விலகும் வரை ஆக்கிரமிப்பு தொடரும் என்று அறிவித்துள்ளனர்.  தற்போது அலரி மாளிகையும் ஜனாதிபதி மாளிகையும்  அருங்காட்சியகமாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இந்த அரண்மனைக்கு வருகை தருகிறார்கள்,மக்களை  பட்டினி கிடக்கும்படி கேட்டபோது அவர்கள் பெற்ற உயர் வாழ்க்கையை சுற்றிப் பார்க்கிறார்கள். இந்த இடங்கள் – பொது அலுவலகங்களாக இருக்க வேண்டும் – ஆனால் பெரிய வாயில்களுக்குப் பின்னால் ரகசியமாக வைக்கப்பட்டு, சாதாரண மக்களை விலக்கி வைப்பதற்காக பெரிய பாதுகாப்பது அடுக்குகள் போடப்பட்டது இருந்தது . ஏழ்மையான மக்கள் இந்த மாளிகையை சுற்றி  பார்வை பார்ப்பது இதுவே முதல் முறை. சிலர் வீட்டு சுற்றுப்பயண வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, மேற்கத்திய அரசாங்கங்களும் இந்தியாவும் ஒரு விரைவான தீர்வை வலியுறுத்தின – காலியாக உள்ள பதவிகளை மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிரப்பி, அனைத்துக் கட்சி தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும். நிச்சயமாக, முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரும் வெகுஜன இயக்கத்தால் இது திட்டவட்டமாக நிராகரிக்கப்படுகிறது.

இந்த இயக்கத்தை ஆதரித்து இதுவரை பங்கேற்ற சிலர் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு தொழிலாளர் சர்வதேச குழுவின் (CWI) இலங்கைப் பிரிவான ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP), இடைக்கால அரசாங்கம், மிகக் குறுகிய கால அடிப்படையில் கூட, போராடும் வெகுஜனங்களின் சார்பாக வழங்காது என்று வாதிடுகிறது. USP வெளியிட்ட அறிக்கை 

 

குறிப்பு

இலங்கையில் உள்ள வெகுஜன இயக்கத்திற்கு ஒற்றுமையாக, லண்டனில் தமிழ் சொலிடாரிட்டியால் போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூலை 9 அன்று இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் – அதே நேரத்தில் இலங்கை எதிர்ப்பு.

லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இலங்கை நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கு செய்த போராட்டம்